சென்னை: மத உரிமை, பொதுநலனை விட வாழ்வுரிமை உயர்ந்தது என ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வாழ்வுரிமை கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தலையிடமுடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள் குறித்து முடிவெடுக்க கோரிய வழக்கில் ஜூலை வரை கோயிலில் நடக்கவுள்ள விழாக்களை எப்படி நடத்துவது எனப்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.