×

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!!!

பொள்ளாச்சி: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவால் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வசந்தகுமார், சபரிராஜன்,  சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், விசாரணையை சி.பி.ஐ. கையில் எடுத்தது. சி.பி.ஐ. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அதிமுக பொள்ளாட்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கின்ற மைக் பாபு ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Tags : AIADMK ,arrests ,CBI ,Pollachi ,Tamil Nadu , Pollachi sex case, AIADMK leader, 3 arrested
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...