சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். நாசரத்பேட்டை போலீஸ் விசாரணை நடத்திய வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.