×

செல்போன் பறித்த ரவுடி கைது

ஆவடி: ஆவடி அருகே பூச்சி அத்திப்பட்டு, மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஷேசாராம்(36). வீராபுரம் கன்னியம்மன் நகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஷேசாராம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அவரை ஒரு வாலிபர் வழிமறித்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்தார். புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், ஷேசாராமிடம் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நந்தகுமார்(23) செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த நந்தகுமாரை நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags : Rowdy , Rowdy arrested for stealing cell phone
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...