×

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் 1 கோடி மோசடி: கைது செய்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை

சென்னை: சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில், 2015ம் ஆண்டு மருத்துவ சீட்டு வாங்கி தருவாக கூறி 1.05 கோடி பணம் ெபற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் 50 லட்சத்துக்கும் மேல் உள்ள மோசடி வழக்கு என்பதால், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத் கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சிறையில் உள்ள நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ₹1.05 கோடி மோசடி வழக்கில் நேற்று கைது செய்தனர். பின்னர்  ஹேம்நாத்தை, மத்திய குற்றப்பிரிவினர், மோசடி வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேம்நாத் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பழக்கத்தை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 2 நாள் விசாரணை முடிவில் தான் ஹேம்நாத் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Chitra ,Hemnath ,suicide , Suicide, actress Chitra, husband Hemnath, fraud
× RELATED சித்ரா பவுர்ணமி கிரிவலம்...