சென்னை: தமிழகத்தில் புதிதாக 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 60,304 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியானது. நேற்று 971 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனாவுக்காக நேற்று மட்டும் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.