டெல்லி: விவசாயிகளுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்? என்ன காரணம்? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக்கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே பேச்சுவார்த்தைக்கு காரணங்கள். வேளாண் குடிமக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது; அவர்களே வெற்றி பெறுவார்கள் எனவும் கூறினார்.