சென்னை: சென்னை புறநகரில் பெய்த பலத்த மழையால் 9 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டது. தூத்துக்குடி, பூனே, அகமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹீப்லி, ஆகிய 6 விமானங்கள் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன. துபாய், சார்ஜா, இலங்கை நாடுகளுக்கு செல்லும் 3 சிறப்பு விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.