×

நீர்நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நீர்நிலைகளை மீட்டு அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரியில் நீர்நிலையை மீட்ககோரி ரமேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நீலகிரி இத்தலாரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை ஆக்கிரமிப்பு என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை மீட்டு 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : State ,iCourt ,Tamil Nadu , Waters, inches, not to occupy, iCord
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...