சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்துபோகும் அதனால் ஆக்கிரமிப்பில் சகிப்பு தன்மை இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.