ஓசூர் : ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், 70க்கும் மேற்பட்ட யானைகள் 3 குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 60க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் கடந்த 15 நாட்களாக முகாமிட்டுள்ள 10 யானைகள் என 70 யானைகள், தற்போது 3 பிரிவுகளாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Tags : Forest Department ,elephant camp-farmers ,forest ,groups ,Hosur , Hosur: In the Sanamavu forest near Hosur, more than 70 elephants have camped in 3 groups as the public and farmers