பிரிட்டன்: உருமாறிய கொரோனா எதிரொலியால் இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.