×

திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயிகள் கடும் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தரையில் படுத்தும், கண்ணீர் விட்டு அழுதும் தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர். பின்னர், திடீரென ஒட்டுமொத்தமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், போலீசார் நுழைவாயிலை இழுத்து மூடினர். அதைத்தொடர்ந்து, டிஆர்ஓ ரத்தினசாமி வந்து, விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : Thiruvannamalai Collector ,Office , Farmers protest at Thiruvannamalai Collector's Office
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...