×

கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ வேட்பாளர்களுக்கு பாராட்டு விழா

தங்கவயல்: தங்கவயல் தாலுகா கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ சார்பு உறுப்பினர்களுக்கு , தொகுதி எம்.பி.எஸ்.முனிசாமி தலைமையில் பாராட்டு விழா நடந்து. பேத்தமங்கலம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பாராட்டு விழா கூட்டத்தில் எம்.பி.எஸ்.முனிசாமி வெற்றி பெற்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசும் போது, பா.ஜவிடம் பணபலம் இல்லை என்றாலும் மக்கள் ஆதரவு, கட்சி தொண்டர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றால் 198 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கிராம உள்ளாட்சி தான் நாட்டின் அடித்தளம். நமக்கு வாக்களித்தவர் மற்றும் வாக்களிக்காதவர் என் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய சாதி, மத, பேதமின்றி பணியாற்ற வேண்டும்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் முதலில் பஞ்சாயத்து தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி கவுன்சிலராக வெற்றிப்பெற்றேன். பின்னர் எம்.பியாக வெற்றி பெற்றேன். பாஜ கட்சியில் மட்டுமே சாதாரண தொண்டனும் தலைவராக உயர முடியும்  என்றார். நிகழ்ச்சியில், மாநில மகளிரணி தலைவி கீதா. மாவட்ட தலைவர் வேணுகோபால், துணை தலைவர் சுரேஷ் நாராயணன், தங்கவயல் நகர தலைவர் கமலநாதன் எஸ்.சி.மோர்ச்சா மாவட்ட தலைவர் ஹனுமந்தா செய்தி தொடர்பாளர் ரவிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,elections ,Grama Panchayat , Congratulations to the BJP candidates who won the Grama Panchayat elections
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...