×

‘டிஎஸ்பி’ மகளுக்கு சல்யூட் அடித்த ‘இன்ஸ்பெக்டர்’ அப்பா : ஆந்திராவில் நெகிழ்ச்சி

திருமலை, :காவல்துறை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் உயரதிகாரிகளுக்கு, அவருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் சல்யூட் அடிப்பது, வணக்கம் செய்வது வழக்கமான ஒன்று. அப்படி கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து பழகிய இன்ஸ்பெக்டர் முதன்முறையாக ஐபிஎஸ் படித்து உயரதிகாரியாக பணியாற்றி வரும் தனது மகளுக்கு சல்யூட் அடித்து ஆனந்த கண்ணீருடன் மரியாதை செய்துள்ளார்.அதன் விவரம்: திருப்பதி கல்யாணி அணை காவல் பயிற்சிப்பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷாம்சுந்தர். இவரது மகள் பிரசாந்தி. கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வு பெற்று ஆந்திர மாநிலம் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.

மாநில பிரிவினைக்கு பின்னர் முதன்முறையாக ஆந்திர மாநில காவல் துறையின் முதல் தற்காலிக காவல் பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க குண்டூர் காவல்துறை கூடுதல் ஆணையர் பிரசாந்தியும், ஷியாம் சுந்தரும் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ஷாம்சுந்தர் எழுந்து நின்று தன்னைக்காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து பெருமையுடன் சல்யூட் அடித்தார். இதைக்கண்ட பிரசாந்தியும் தந்தைக்கு பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது ஷாம்சுந்தர் ஆனந்த கண்ணீர் விட்டார்.

Tags : Inspector ,Andhra , Inspector, Dad, Andhra, Flexibility
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது