டெல்லி: நாட்டிலேயே 2 தடுப்பூசிகளை தயாரித்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தேசிய அளவீட்டு மாநாட்டில் காணொலியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமிதம் கொள்கிறது என கூறினார். இந்திய தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.