×

பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் : திருக்குறளை எழுதியது ஒளவையார், இயேசுவை சுட்ட கோட்சேவைத் தொடர்ந்து அமைச்சரின் சர்ச்சை கருத்து!!

திண்டுக்கல்: பொங்கல் பரிசு பணம் எங்கேயும் போகாது. டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வந்து விடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.‘நேற்று திருக்குறளை எழுதியது ஒளவையார் என்று பேசி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையில் சிக்கினார். கடந்த வாரம் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சே என்று பேசி, மக்களை திகைப்பில் ஆழ்த்தினார். அந்த வரிசையில் பொங்கல் பரிசு பணம் ரூ.2,500ம் டாஸ்மாக் கடைக்கே வந்து விடும் என்று  திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி கோமையன்பட்டியில் ‘அம்மா மினி கிளினிக்’ திறப்பு விழா நடந்தது. கிளினிக்கை துவக்கி வைத்து விழா மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த ‘குடிமகன்’ ஒருவர் பொங்கல் பரிசு ரூ.2,500 பெறுவதற்கான டோக்கன் தனக்கு தரப்படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் , ‘‘நீ ஒன்று பழகிக்கொள். உங்க ஊருக்கு வந்து நான் மைக்கை பிடித்து பேசும்போது நீ குறுக்கே கேள்வி கேட்கிறாய். கீழே இறங்கி வரும் பொழுது என்னிடம் கேட்கலாம். நீ தண்ணி போட்டிருக்கிறாய். நான் என்ன பதில் சொல்ல முடியும்?இந்த டாஸ்மாக் பெரிய கொடுமையா போச்சு. இவருக்கு கொடுக்கும் பொங்கல் பரிசு பணம் எங்கேயும் போகாது. டாஸ்மார்க் மூலம் அந்த பணம் மீண்டும் அரசுக்கே வந்து விடும். அரசு வழங்கும் பணம் அரசுக்கே கிடைத்து விடும்.வேஷ்டி, சேலை, கரும்பு, அரிசி, பருப்பு உள்ளிட்டவை தாய்மார்களுக்கு சென்று விடும். அதை பாதி விலைக்கு விற்க முடியாது. அரசு கொடுக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசு நாசமா போனாலும் போகுது என்று தாய்மார்கள் விட்டு விடுகின்றனர்’’ என்றார்.

Tags : Godse ,government ,Thirukuralai ,Olavaiyar ,Tasmag ,minister ,Jesus , Pongal Money, Tasmag, Minister, Controversy, Opinion
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...