×

தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை: வளி மண்டல மேல் அடுக்கு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், 10ம் தேதி வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.


Tags : districts ,Tamil Nadu , Coastal districts of Tamil Nadu will receive thundershowers
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...