×

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே செம்பேடு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் பட்டப்பகலில் டிராக்டரில் சிலர் மணல் கொள்ளையில் நேற்று ஈடுபட்டனர். இதையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பட்டப்பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர். பொதுமக்கள் மடக்கியதால் டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். தங்களது கிராமத்தில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையிலும் கனிமவள சுரண்டலில் ஈடுபட்ட டிராக்டரை சிறைபிடித்த பொதுமக்கள் வெங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : river ,Kochasthala , Sand theft in Kochasthala river: Tractor confiscation
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை