மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து மொத்த விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் எஸ்.எஸ்.காலனி எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் காளிமுத்து நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மோட்டார் அறையில் பதுக்கி வைத்திருந்த 29 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பொன்மேனியை சேர்ந்த மகேந்திரன், மகபூப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் சிந்தாமணி குருநாதன் கோயில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை அவனியாபுரம் எஸ்ஐ தண்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பகவதி (23), பிரபாகரன் (22), கருப்பசாமி (22) மற்றும் சரவணக்குமார் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய அருண், ஜெயராஜ் மற்றும் வாழைத்தோப்பு விஜயா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.