சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மண்டல பொறுப்பாளர்களாக ஏ.எஸ்.அக்பர், இளங்கோவன், எஸ்.சந்திரா, பார்த்தசாரதி, எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக ஆறுமுக நயினார், அழகர்சாமி, தாமோதரக் கண்ணன், சிங்கை சந்துரு, மணிகண்டன், மகாலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.