சென்னை: ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த 2 பேர் பெங்களூரில் கால் சென்டர் நடத்தி லோன் ஆப் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட லேப்டாப், மொபைல் போன்கள் தடயவியல் நிபுணர்கள் மூலமாக சோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை மட்டும் குறிவைத்து லோன் ஆப்களை சீனர்கள் நடத்தி வருகிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் எனவும் கூறினார்.