×

அஷ்வின் சிந்தனையாளர்

இந்தியாவுக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட்களின் சுமாராக ஆடியவர் ஆஸி வீரர் மார்னஸ் லாபுஷேன் தான். அவரே 4 இன்னிங்ஸ்களில் 47, 6, 48, 28 ரன் எடுத்திருந்தார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரன் எடுக்க ஆஸி வீரர்கள் திணறியது வெளிப்படை. அதிலும் 2வது டெஸ்ட்டில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அப்படி மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆஸி வீரர் லாபுஷேன், ‘‘அவர்கள்(இந்தியா) நிச்சயமாக  ஏதோ திட்டத்தோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் வீசும் பந்துகள் ஸ்டெம்புகளை விட்டு அகலவில்லை. கால்பக்கமே அழுத்தமாக வீசுவதால் ரன் எடுக்க முடியவில்லை.

அஷ்வினுக்கு எதிராக இதற்கு முன்பு நான் ஆடியதில்லை. அவர் சிறந்த பந்து வீச்சாளர் மட்டுமல்ல. சிறந்த சிந்தனையாளர். மிகவும் யோசித்து, திட்டமிட்டு பந்து வீசுகிறார். அதனால் அவர்கள் வலையில் நாங்கள் எளிதில் சிக்கிக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.இந்த பிரச்னைகளில் இருந்து மீள வேண்டும். அதற்கு இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் வழிகளை நாங்கள் காண வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Ashwin , Ashwin is a thinker
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...