×

மதுரையில் இருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் சென்ற டிராக்டர்கள்

மதுரை: மதுரையில் இருந்து வங்கதேசத்திற்கு சரக்கு ரயிலில் டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனியார் நிறுவனம், விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர் தயாரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டிராக்டர்கள் சாலை வழியாகவும், ரயில் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு ரூ.2 கோடியே 33 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டது. இந்தாண்டு இதுவரை 61 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள் அனுப்பப்பட்டு ரூ.11 கோடியே 78 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 80 சதவீதம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் கூறுகையில், ‘மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் நேற்று 25 சரக்கு பெட்டிகளில் டிராக்டர்கள் வங்கதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. தெற்கு ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாலை வாகனம், ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது’ என்றார்.


Tags : Madurai ,Bangladesh , Tractors traveling by train from Madurai to Bangladesh
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...