×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.35 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,35,636-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 49,580-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 18,32,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 52,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra today, 3,524 people were diagnosed with corona infection in a single day
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...