×

குறைந்தது தொற்று பரவல்...! தமிழகத்தில் மேலும் 921 பேருக்கு கொரோனா: இன்று மட்டும் 1,029 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,18,935 ) 8 லட்சத்து 18 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,18,935 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,98,420 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* இன்று மட்டும் 1,029 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,135 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 8; தனியார் மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 252 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னையில் மொத்தம் 2,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,42,58,645 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இன்று மட்டும் 67,151 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 237 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 170.

* தமிழகத்தில் தற்போது 8,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,94,928 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 573 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,23,973 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 348 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.


Tags : spread ,Corona ,Tamil Nadu , At least the spread of infection ...! Corona for 921 more in Tamil Nadu: Today alone 1,029 recovered and discharged
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...