×

சில்லி பாயின்ட்…

*  கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயமாகப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து கூறியுள்ளார்.
* இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களை நிறவெறியுடன் நடத்தியதாக முன்னாள் நடுவர்கள் ஜான் ஹோல்டர், இஸ்மாயில் தாவூத் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*  ஆஸ்திரேலியா  இந்தியா மகளிர் அணிகளிடையே இம்மாதம் நடைபெற இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*  மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் இருந்து விலகியுள்ளார்.
* பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசி. வேகம் நீல் வேக்னர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என நியூசி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Tags : I have been training hard. We are confident of winning a medal at the Tokyo Olympics, ”said Indian badminton star PV Sindhu.
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு