×

ஓவியம், சிற்ப சாதனையாளர்களுக்கு 1 லட்சமாக பரிசு உயர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலை துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலை பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களை பாராட்டும் வகையில் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையால், ஆண்டுதோறும் மரபுவழி பிரிவில் ஒரு கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் ஒரு கலைஞருக்கும், கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு, ஒரு கலைஞருக்கு ரூ.50,000 வீதம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 24.03.2020, தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலை துறைகளின் மரபு வழி  மற்றும் நவீனபாணி கலை பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது  தொகை 50,000த்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். விருதாளர்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 6 ஆக உயர்த்தி ஆணை வெளியிடுகிறது.

Tags : sculptors ,Government , Painting, Sculptor, Government, Announcement
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...