×

புத்தாண்டு வாழ்த்து கூற நேரில் வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று உடல் நலமடைந்து தற்போது என் சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறேன்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் என்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.விரைவில் இயக்கப் பணிகளில் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் ெதாண்டர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Tags : announcement ,KS Alagiri , New Year, Greetings, KS Alagiri, Announcement
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...