×

தேமுதிக உயர்மட்ட நிர்வாகிகள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்களாக பிரேமலதா விஜயகாந்த்(மேற்கு சென்னை), என்.ஜாகீர்உசேன்(புதுக்கோட்டை வடக்கு), மா.நடராஜன் (திருச்சி தெற்கு) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இதே போல, தேர்தல் பணி குழு செயலாளர்களாக எஸ்.ஆறுமுகநயினார்( தூத்துக்குடி தெற்கு), வி.தாமோதரக்கண்ணன்(மதுரை வடக்கு), சிங்கை கே.சந்துரு(கோவை மாநகர்), வி.எஸ்..மணிகண்டன்(திருவண்ணாமலை தெற்கு), ஆர்.அழகர்சாமி(மதுரை தெற்கு), கொ.தங்கமணி(திருச்சி மாநகர்), பேராசிரியர் சி.மகாலெட்சுமி(மேற்கு சென்னை) நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு,தேமுதிக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்,  வார்டு, ஊராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேமுதிகவின் சிறப்பான  வளர்ச்சி பெறபாடுபட வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Temujin ,executives ,Vijaykanth , DmDk, Vijayakant, Announcement
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு