சென்னை: பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணிகளை நியாய விலைக்கடை பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும், வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் அதிமுகவினரால் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.