×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். பிறக்கும் புத்தாண்டில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கும் இதுவே தக்க தருணம் ஆகும். இந்த புத்தாண்டு, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என கூறினார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், கட்சிகள் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Tags : Ramnath Govind ,country ,eve , On the eve of the English New Year, President, congratulations to the people
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...