×

ஊட்டி படகு இல்ல வளாகத்தில் பூந்தொட்டிகளில் செல்பி ஸ்பாட்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த படகு இல்லம், சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா சிகரம், கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களும் கடந்த 7ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பல மாதங்களுக்கு பிறகு படகு இல்லம் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டியில் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக படகு இல்லம் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. இதனிடையே படகு இல்லத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ வசதியாக டிக்கெட் வழங்கும் இடத்திற்கு அருகில் ஆயிரம் மலர் தொட்டிகள் கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



Tags : Selby ,premises ,Ooty Boat House , Selby spot in flower pots on Ooty Boat House premises
× RELATED செல்பி படங்களை பார்த்து போடுங்க…மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’