சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் மடிக்கணினிகள் பறிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாணவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விளம்பரம் செய்து நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. தனியார் நிறுவனத்தை நம்பி கட்டணம் செலுத்த இயலாததால் மடிக்கணினிகளை 5 மாணவர்கள் கொடுத்துள்ளார்.