சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்ராவுடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி போலீசில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.