மணலி: சென்னை மணலி புதுநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் காவல் உதவி ஆழிவாளர் உயிரிழந்தார். மண் சறுக்கி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி காவல் உதவி ஆய்வாளர் முருகன்(54) மீது ஏறியது. விபத்தில் படுகாயமடைந்த முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குபேந்திரனை(32) போக்குவரத்து புலனாய்வு போலீஸ் கைது செய்தது.