×

புதிதாக 945 பேருக்கு தொற்று: லண்டனில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா: தொடர்பில் இருந்த 20 பேரும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போதுவரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 70,196 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,17,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,060 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதில் 7,96,353 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 8 பேரும் தனியார் மருத்துமனையில் 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,109 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,London , Chennai, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...