×

நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பெற்றோர் மனு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 9ம்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் மீது கடந்த 14ம் தேதி கைதானார். இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து 250 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை நசரத்பேட்டை போலீசில் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாய், தந்தை முதல்வரின் தனிப்பிரிவில் தனி அலுவலர் சரவணவேல்ராஜிடம் மனு அளித்தனர்.

Tags : Parents ,Chitra , Actress Chitra, Suicide, CBCID, Petition
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்