×

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு

புழல்: புழல் அண்ணா நினைவு நகர் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வரப்படுகிறது. இதை கண்டித்து புழல் அண்ணா நினைவு நகர் பெரம்பூர் செம்பியம் மாநில நெடுஞ்சாலையில் ஏராளமான பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அரசு மதுபான கடையை திறக்க கூடாது.  அப்படி திறந்தால் இந்த பகுதியில் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்க வாய்ப்புள்ளது என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர். இதில் அதிமுக கட்சியை தவித்து மற்ற கட்சியினர் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.


Tags : Tasmac , Arrangements are being made to open a new government Tasmac store in the Puhal Anna Memorial City area.
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்