×

மல்லையா, நீரவ் மோடியை விட 10 மடங்கு அதிகம்: ரூ.86,188 கோடி வங்கி மோசடி விசாரணை வலையில் அனில் அம்பானி!!!

மும்பை : அனில் அம்பானி நடத்தி வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்களின் கணக்குகள் மோசடியானவை எனக் கருதுவதால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த கடன் வழங்கிய வங்கிகள் முடிவெடுத்துள்ளன.முகேஷ் அம்பானியின் தம்பியும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளருமான அனில் அம்பானி, கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறார். ஜியோவின் அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடும் சரிவைக் கண்டது.

இந்த நிலையில், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃபராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் 86 ஆயிரத்து 188 கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூலம் 49 ஆயிரத்து 193 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் மூலம் 24 ஆயிரத்து 306 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இன்ஃப்ரா டெல் நிறுவனம் மூலம் 12 ஆயிரத்து 687 கோடி ரூபாயும் அனில் அம்பானி கடனாகப் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த நிறுவனங்களின் கணக்குகள் போலியானவை என்றும், மோசடியானவை என்றும் கடன் வழங்கிய வங்கிகள் கருதுவதால், இந்தக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்தத் தொகை விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் வங்கிக் கணக்கு மோசடியை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mallya ,Neerav ,Anil Ambani ,Modi , Mallya, Neerav Modi, banking, fraud
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்