×

தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை : தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜகவின் 234 சட்டமன்ற தொகுதிகளின் அமைப்பாளர்கள் , பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி , மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜனிகாந்தின் அரசியல் வருகை இல்லை, கட்சியின் உட்கட்டமைப்பு, வரும் சட்டமன்ற தேர்தல் பணி, பிரச்சார வியூகம், செல்வாக்குள்ள தொகுதிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள் இல.கணேசன், ஹெச்.ராஜா,கே.டி.ராகவன், எம்.என்.ராஜன், நாகேந்திரன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு. பொறுப்பாளர், அமைப்பாளர் 468 பேர், மாவட்ட தலைவர்கள் 90, மாநில நிர்வாகிகள் என 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அமமுகவை சேர்ந்தவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் கட்சியில் இணைந்தனர்.

பின்னர் எல்.முருகன், சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.அப்போது பேசிய எல்.முருகன், அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது . தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும். கூட்டணிக் கட்சியின் ஆட்சி என்ற முறையில் அதிமுக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 59 ஆயிரம் கோடி மதிப்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ளார். விவசாயிகள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை கொண்டு செல்கின்றனர். எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.முதல்வர், துணை முதல்வர் அறிவித்த பின்னர் அனைத்து கூட்டத்திலும் கூட்டணி தொடர்வதாகவே நான் தெரிவித்துள்ளேன்.திமுக வழக்கு போட்டு என்னை மிரட்ட முடியாது, என்றார்.

Tags : L Murugan ,BJP ,Modi ,Tamil Nadu , L. Murugan, Request
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...