×

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறதா?.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரிட்டனில் இருந்து வருபவர்களை மட்டும் பரிசோதனை செய்வதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதிக்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : corona test ,travelers , Is a corona test being conducted on all travelers coming from abroad?
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை