×

கந்துவட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயன்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியை் சேர்ந்தவர் இளையராஜா (26). பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வாடகைக்கு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு  தொழிலை விரிவுபடுத்த புது கும்மிடிப்பூண்டி பகுதியை் சேர்ந்த வெங்கடேசன், ராணிமுத்து, சங்கர், தனசேகரன், ஆகியோரிடம் ₹12.75 லட்சம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து இளையராஜாவால் வட்டிசெலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, பணம் கொடுத்தவர்கள் இளையராஜாவை வற்புறுத்தி இறைச்சி கடையை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இளையராஜா சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், நாகராஜ்(55) என்பவர் வெங்கடேஷிடம் ₹3 லட்சம்  கொடுத்து ஒரு வருடத்திற்கு இறைச்சிக் கடையை குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளையராஜா, நேற்று காலை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட சிப்காட் போலீசார் இளையராஜாவை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : teenager , Attempt to set fire to a teenager by gang violence
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘