×

3 பேரை கத்தியால் குத்தியவருக்கு வலை

பெங்களூரு: குடகு மாவட்டம் வீராஜ்பேட்டை தாலுகா கரடிகோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இதே பகுதியை சேர்ந்த பெண்களை தவறான நோக்கத்தில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது விஷயமாக கடந்த சில தினங்களுக்கு முன் வில்சன் (45), ஸ்டீபன் (28), 17 வயது சிறுமி ஆகியோர் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இவர்களை கிராமத்தினர் சமாதானம் செய்து வைத்தனர். இதில் இவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வில்சன் வீட்டுக்குள் நுழைந்த ராமதாஸ் மூன்று பேரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட இவர்கள் வலி தாங்க முடியாமல் சத்தமாக கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சித்தாபுரா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மைசூரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் வில்சன், ஸ்டீபன் ஆகியோரின் நிலை கவலைகிடமாகவுள்ளது. இது குறித்து சித்தாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ராமதாஸை தேடி வருகின்றனர்.

Tags : Bangalore
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!