×

ஷாதாரா பகுதியில் அதிர்ச்சி: பாட்டியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த பேரன்

புதுடெல்லி: கிழக்கு டெல்லியின் ஷாதாரா பகுதியில் பணம் தர மறுத்த தனது  பாட்டியை தலையில் சுத்தியால் தாக்கி கொலை செய்து தப்பியோடிய 19வயது பேரனை  போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு டெல்லியின் ரோடாஸ் நகரில்  மூதாட்டி ஒருவர் தலையில் சுத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக  கடந்த ஞாயிறன்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ  இடத்திற்கு சென்ற போலீசார். அங்குள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த  மூதாட்டியின் சடலத்தை கண்டனர். அருகில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட  சுத்தியலும் கிடந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்ததாவது: கொலை  செய்யப்பட்ட மூதாட்டிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அதே  கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வசிக்கிறார்.

இளைமகன் அதே பகுதியில் உள்ள  வேறு இடத்தில் வசிக்கிறார். சம்பவத்தன்று கீழ் தளத்தில் மூதாட்டி வசித்த  வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த மூத்த மகன் வீட்டை  உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவரது தாய், தலையில்  தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் நாற்காலில் கிடைந்ததை பார்த்து  அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது சகோதரனையும் வரவழைத்தார். பின்னர்,  இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு வந்து நாங்கள் விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்தோம்.  எங்களது விசாரணையில்,மூதாட்டியை அவரது மூத்த மகனின் 19 வயது மகன்(பேரன்)  பணத்திற்காக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் கேட்டு தராததால்  பாட்டியை தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு 18,000 பணத்துடன்  தப்பிச்சென்றார். அவரை தற்போது கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினார்.

Tags : grandson ,area ,Shadara , Shadara, shock, murder
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு