×

லண்டனில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 35 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 64,768 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில்  இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 35 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,16,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,065 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் 7,95,293 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 12  ேபர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 6 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,092 ஆக உயர்ந்துள்ளது.



Tags : Corona ,London , Corona infection has been confirmed in 35 people who have been in and out of London in Tamil Nadu so far
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...