மும்பை: புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மத்திய அரசு நசுக்க முயற்சிக்கிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாடியுள்ளார். ஜனநாயகத்தைப் பற்றி பேசும் பாஜக அரசு, அரசுத்தனத்துடன் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது எனவும் கூறினார்.