சென்னை: உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் மட்டுமன்றி அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.