×

நீங்கள் ஒரு சர்வாதிகாரி என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்து, பஞ்சாப் வக்கீல் விஷம் குடித்து தற்கொலை!!

புதுடெல்லி, வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, பஞ்சாப் வழக்கறிஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் விவசாய போராட்டங்களில் பங்கேற்க வந்த மற்றும் பங்கேற்றவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் டிக்காரி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வழக்கறிஞர் அமர்ஜித் சிங் என்பவர் பஞ்சாப்பில் இருந்து போராட்ட களத்திற்கு வந்தார்.

அவர், விவசாயிகளின் போராட்டத்தை கண்டு வருத்தமடைந்தார். பின்னர் அரியானாவின் பகதூரில் மனமுடைந்த நிலையில் இருந்தார். திடீரென அவர் விஷம் குடித்தார். மயக்க நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியில் வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் நகல் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில், ‘மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக எனது உயிரை தியாகம் செய்கிறேன்.

பிரதமர் மோடி ஒருசில மனிதர்களை போல மாறிவிட்டார். விவசாய சட்டங்களால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கும். எனவே விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ‘விஷம் குடித்து இறந்த வழக்கறிஞரின் பெயர் அமர்ஜித் சிங் என்றும், அவர் பாசில்காவின் ஜலாலாபாத் பார் அசோசியேஷன் உறுப்பினராகவும் இருந்தார்’ என்று தெரியவந்தது.


Tags : lawyer ,Modi ,dictator ,Punjab ,suicide , Dictator, Prime Minister Modi, letter
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...