×

இந்தியாவில் ஒரே நாளில் 16,432 பேருக்கு கொரோனா தொற்று; 252 பேர் உயிரிழப்பு; 24,900 பேர் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.48 லட்சத்தை தாண்டியது.  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக 16,432 பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 24,900 குணமடைந்துள்ளனர் எனவும், 252 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

* புதிதாக 16,432 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,303 ஆக உயர்ந்தது.
* புதிதாக 252 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,48,153 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 24,900 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,07,569 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,68,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 95.92% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.63% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,83,695 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 16,98,01,749 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : Corona ,India ,fatalities , In India, corona infection, death, discharge
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...